இந்த திருமண செய்தி குறித்து பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா இதுவரை அதிகாரப்பூர்வ எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை, ஆனால் இப்போது இணையத்தில் அவரது திருமணம் பற்றிய செய்தி தீயாய் பரவி வருகின்றது.

மற்றொரு தகவல் என்ன என்றால் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் பாகம் 2-ன் கன்னட பதிப்பில் ஒரு பாடலை சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் பாடியதாக தெரிவிக்கிறது. மேலும் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்க்கு 2 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கொண்ட யூடியூப் சேனலும் உள்ளது.
சமூக வலைதளத்தில் சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் செய்த ராமபஜனையை கடந்த ஜனவரி மாதம் 2014-ல், பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார். அதில் கன்னடத்தில் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் இந்தப் பாடலானது பிரபு ஸ்ரீராமரின் பக்தியின் உணர்வை அழகாக எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய முயற்சிகள் நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறது என்று பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்திருந்தார்.
வழக்கறிஞரான தேஜஸ்வி சூர்யா தற்போது பெங்களூரு தெற்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில், அவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் 3.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் பி கே ஹரிபிரசாத்தை தோற்கடித்தார். செப்டம்பர் 2020 முதல் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
தற்போது தேஜஸ்வி மற்றும் சிவஸ்ரீ இருவரின் குடும்பத்தினரும் சந்தித்து திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திருமணத்தில் அரசியல் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது திருமணம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த செய்தியை தேஜஸ்வி சூர்யா எப்போது உறுதி செய்வார் என்றும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.