எருமை மாடா நீ? நிகழ்ச்சி மேடையில் உதவியாளரே திட்டிய அமைச்சர் பன்னீர்செல்வம்!

Minister M.R.K Panneerselvam: தஞ்சையில் நடந்த மாநாட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உதவியாளரை ஒருமையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் உதவியாளரை தகாத முறையில் பேசிய அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உதவியாளரை தரைக்குறைவயாக திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடையிலேயே உதவியாளரை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஒருமையில் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது, இந்த மாநாட்டில் அமைச்சர் ம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மைக் முன்பு நின்று பேசக் தொடங்கி இருக்கிறார்.

உதவியாளரே திட்டிய அமைச்சர்

அப்போது, பேசுவதற்கான குறிப்பு அங்கு இல்லாததை கண்டு அமைச்சர் பன்னீர்செல்வம் டென்ஷன் ஆகினார்.  அப்போது, உதவியாளர் பரசுராமன் எங்கு என்று கோபமாக கேட்டிருக்கிறார். அமைச்சர் அழைப்பதை தெரிந்த உதவியாளர் பரசுராமன், உடனே விழா மேடைக்கு பேச்சு குறிப்பு நகலுடன் வந்திருக்கிறார்.

அப்போது, “எருமை மாடு” என்று கூறி ஒருமையில் பேசி ”பேப்பர் எங்கே?” என அமைச்சர் பன்னீர்செல்வம் திட்டி இருக்கிறார். மேலும், உதவியாளர் தந்த பேச்சு நகலை மேடையிலேயே தூக்கி வீசியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் மாநாட்டில் இருந்த அனைவரையும் முகம் சுளித்த வைத்தது. அமைச்சர் பன்னீர்செல்வத்தில் இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.  மேலும், அமைச்சர் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

யார் இந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்?

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். இவர் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்றிருக்கிறார். கருணாநிதி தலைமையில்ன அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.

1996ஆம் ஆண்டு கருணாநிதி அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், 2006ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.

கடநத் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலி குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது இந்த வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು