‘ வளர்ச்சிக்கு எதிரானது ஜாதி’: சென்னை ஐகோர்ட் கருத்து

சென்னை: ”சமூகத்தை பிறவுபடுத்தி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானதாக உள்ளது,” என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்து உள்ளது.

கோவை ஆவல்பட்டியில் உள்ள இரு கோயில்களுக்கு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த அறங்காவலர்களை நியமிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இதனை சென்னை ஐகோர்ட் விசாரித்த போது தெரிவித்த கருத்து: கலவரங்களை தூண்டும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானது. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் ஜாதி வளர்ச்சிக்கு எதிரானது. ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் கோரிக்கை அரசியலமைப்பு பொது கொள்கைக்கு விரோதமானது. ஜாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலனை செய்யாது.

‘ பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது. ஜாதி என்ற தேவையில்லாத சுமையை சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழ் இறக்கவில்லை. இவ்வாறு ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು