தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும் ஜெயலலிதா நகைகளை மதிப்பீடு செய்யும் பணி 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை மதிப்பிடும் பணி நடைபெற்றது. மதிப்பீடு செய்யப்பட்ட, மதிப்பீடு செய்யப்படாத அனைத்து ஆபரணங்களையும் போலீசார் மீண்டும் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். நாளை காலை மீண்டும் நீதிமன்றத்திற்கு அனைத்து நகைகளும் எடுத்து வரப்பட்டு மதிப்பீடு செய்யும் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.