‘பாஸ்டேக்’ புதிய விதிகள்: இன்று முதல் அமல்; முழு விபரம் இதோ!

சென்னை: நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ‘பாஸ்டேக்’ நடைமுறையில் புதிய விதிகள் இன்று (பிப்.,17) முதல் அமலுக்கு வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. சுங்கச் சாவடிகளில் காத்திருப்பை தவிர்த்து, நெரிசலை குறைப்பதற்காக பாஸ்டேக் திட்டம் அறிமுகமானது. இதன்படி மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக வங்கிகள், மொபைல் போன் நிறுவனங்கள் வழங்கியுள்ள மின்னணு அட்டைகள், வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளன. வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது, அங்குள்ள மின்னணு கருவிகள் வாயிலாக, சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பு நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில் பாஸ்டேக் கட்டணம் வசூலிப்பதற்கு என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா புதிய விதிகளை வகுத்துள்ளது. இதனை இன்று முதல் நடைமுறைப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு என்பிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

* அதன்படி, கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரியை பாஸ்டேக் வங்கி கணக்குகளில், முறையாக பதிவு செய்யாத வாகனங்கள் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು