பனாமா: அமெரிக்காவில் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் பிற நாட்டவர்கள், பனாமாவில் உள்ள ஹோட்டல் அறையில் சிறைபிடிக்கப்பட்ட போது, ஜன்னல் வழியாக உதவி கேட்டு நின்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் பணியில் டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது வரையில் 3 கட்டங்களாக இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்படுபவர்களுக்கு கை மற்றும் கால்களை விலங்குகளால் பூட்டப்பட்டு அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பனாமாவில் உள்ள ஹோட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் ஜன்னல் கதவுகள் வழியாக, உதவி கேட்டு நின்றிருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் நிலவும் சிக்கல்களால், பனாமாவில் இருந்து, அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.