Tamil Nadu Budget 2025 Highlights: தமிழக பட்ஜெட் 2025… முக்கிய அம்சங்கள் என்னென்ன? முழு

Tamil Nadu Budget 2025 Highlights in Tamil: 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை, மார்ச் 14: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை  (Tamil Nadu Budget 2025) மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) தாக்கல் செய்தார். இரண்டாவது முறையாக தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே ஆகும். இந்த நிலையில், 2025 மார்ச் 14ஆம் தேதியான இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. கல்வித்துறை, சமூக நலத்துறை, போக்குவரத்து, சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறை வாரியாக பல்வேறு அறிவிப்புகளை தங்கம் தென்னரசு அறிவித்தார். எனவே, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

பட்ஜெட்டில்  சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • திருக்குறளை ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்ட 193 உலக நாடுகளில் அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டிற்கு 100 நூல்கள் வீதம் 500 ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை பதிப்பிக்கும் முயற்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புத்தக கண்காட்சிகள் நடத்தப்படும்.
  • இதற்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கணினி வழித் தேர்வு முறையில் உலகத்தமிழ் உலிம்பியாட் போடி இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்.
  • தமிழகத்தில் சேலம், தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களில் தெல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.
  • ரூ.21 கோடி மதிப்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியம் அமைக்கப்படும்.
  • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ.3,500 கோடியில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய விடுகள் கட்டப்படும்.
  • முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 6100 கி.மீ நீளத்தில் சாலை அமைக்கப்படும். இதற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சீரமைக்க இயலாத வீடுகளுக்கு பதிலாக 25,000 புதிய வீடுகள் கட்டப்படும். ரூ.600 கோடியில் புதிய வீடுகள் கட்டப்படும்.

கல்வித்துறை

  • சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூக்காங்கள் ரூ.88 கோடியில் அமைக்கப்படும்.
  • 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்ய ரூ.675 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • திருச்சி, மதுரை, ஈரோடு, நெல்லை, கோவையில் நதிக்கரை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் கொண்டு வரப்படும்.
  • சென்னையில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
  • 2025-26ஆம் நிதியாண்டில் மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 2025-26ஆம் நிதியாண்டில் 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்.
  • சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் மாணவிகள் விடுதிகள் அமைக்கப்படும். இதற்கு ரூ.275 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
  • ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.

சமூக நலத்துறை

  • நகரப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்படுத்த கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.
  • ரூ .100 கோடியில் சென்னை, கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும்.
  • ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.
  • முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா ரூ.250 கோடியில் அமைக்கப்படும். இதன் மூலம் ரூ.20,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
  • 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
  • ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதில் 17,500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.

போக்குவரத்து துறை

  • ரூ.11,721 கோடியில்புதிய புனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
  • ரூ.70 கோடியில் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க வேண்டும்.
  • 1,125 மினி பேருந்துகள் அமைக்கப்படும். சென்னையில் 950, மதுரையில் 100, கோவையில் 75 மினி பேருந்துகள் இயக்கப்படும்.
  • 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ.74 கோடி ஒதுக்கீடு.
  • 10 இலட்சம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.5 இலட்சம் கோடி ஒதுக்கீடு.
  • ரூ.2,100 கோடியில் திருவான்மியூர் உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
  • கோவையில் ரூ.348 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். நெல்லையில் ரூ.225 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும்.
  • பழமையான தேவாலயங்களைப் புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
  • சென்னை-செங்கல்பட்டு, திண்டிவனம் – சென்னை-காஞ்சிபுரம்- வேலூர்-கோவை-திருப்பூர்-ஈரோடு-சேலம் ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்கும் மிக அதிவேக ரயில்வே அமைப்பை உருவாக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

பெண்கள் திட்டங்கள்

  • பத்து லம்சம் வரை மதப்புள்ள அசையா சொத்துகளை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1 சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும்.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் பேரில் ஒவ்வொருவருக்கும் கைக்ணி/மடிக்கணின் வழங்கப்படும்.
  • அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயலாக்கம்.
  • ரூ.75 கோடியில் நகர்ப்புற பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
  • தமிழகத்தில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கொண்டு வரப்படும்.
  • அரசு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು