பூந்தமல்லி – போரூர் ரூட்டில்.. வரும் டிசம்பர் முதல் மெட்ரோ ரயில்கள்! தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் இப்போது மூன்று வழித்தடங்களில் மெட்ரோ கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான வழித்தடத்தில் இந்த டிசம்பர் மாதம் முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.சென்னை மெட்ரோ இப்போது 2 ரூட்களில் இயங்கி வரும் நிலையில், இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மறுபுறம் 2ம் கட்ட மெட்ரோ கட்டுமானமும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானம் குறித்து முக்கிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அதாவது பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான வழித்தடத்தில் இந்த டிசம்பர் மாதம் முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் தனது பட்ஜெட் உரையில், “தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 63246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.” என்றார்.இப்போது மாதவரம்- சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என 116.1 கிமீ தூரத்திற்கு மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது..

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು