Sunita Williams : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. பயத்தில் இந்திய உறவினர்கள்.. என்ன காரணம்?

விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9 மாதங்கள் மற்றும் 13 நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்புகின்றனர். அவருடன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் Crew-9 இன் மேலும் இரண்டு விண்வெளி வீரர்களும் வருகிறார்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி மையத்தில் இருந்து விரைவில் பூமிக்குத் திரும்ப உள்ளார். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர் திரும்பி வரப் போகிறார். உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவர் திரும்பி வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர், அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியின் மத்தியில், அவரது உறவினரின் முகத்தில் கவலையின் ரேகைகளும் உள்ளன. இந்தியாவில் இருக்கும் அத்தை மகனான தினேஷ் ராவல், சுனிதா பயணம் குறித்து பல்வேறு விசயங்களை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் ராவல், ”சுனிதா என் மாமாவின் மகள். அவள் கிளம்பும்போது, ​​நான் அமெரிக்கா சென்றேன். அவள் என்னைச் சந்திக்க வந்திருந்தாள். நாங்கள் மூன்று நான்கு நாட்கள் ஒன்றாக இருந்தோம். நீங்க ஏன் போறீங்கன்னு கேட்டேன். உலகிற்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவள் அமர்ந்திருந்தாள். அதனால்தான் அந்த முடிவை அவள் எடுத்தாள் என்றார்

பயமாக இருக்கிறது

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் உறவினர் தினேஷ் ராவல், ஊடகங்களுடன் பேசுகையில், சுனிதாவின் வருகை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, மறுபுறம், அவர் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ”நான் மகிழ்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் எனக்குப் பயமாக இருக்கிறது. அவர் பூமிக்கு திரும்பி வந்து நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பி வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றார்

சிறு வயதிலிருந்தே தைரியமானவள்.

சுனிதாவின் குழந்தைப் பருவ நினைவுகளையும் நினைவு கூர்ந்த தினேஷ் பல்வேறு நினைவுகளை குறிப்பிட்டுள்ளார். அத்ல், ” அவள் சிறியவளாக இருந்தபோது, ​​ இந்தியாவுக்கு வந்தாள், நான் அவளை ஒட்டக சவாரிக்கு அழைத்துச் செல்வேன், அவள் ஒட்டகத்திலிருந்து இறங்க மாட்டாள். நாங்கள் சோமநாதருக்கு யாத்திரை மேற்கொண்டோம், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்தோம். நான் பாஸ்டனில் நடந்த அவரது திருமணத்தில் கலந்து கொண்டேன்.சிறு வயதிலிருந்தே தைரியமானவள் என்றார்.

9 மாதங்களுக்குப் பிறகு

விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9 மாதங்கள் மற்றும் 13 நாட்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்புகின்றனர். அவருடன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் Crew-9 இன் மேலும் இரண்டு விண்வெளி வீரர்களும் வருகிறார்கள். இந்திய நேரப்படி இன்று காலை 10:35 மணிக்கு அன்டாக்கிங் நடைபெறும், அதாவது, டிராகன் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) பிரியும். இது மார்ச் 19 ஆம் தேதி அதிகாலை 3:27 மணியளவில் புளோரிடா கடற்கரையில் தரையிறங்கும். விண்வெளியில் இருந்து பூமிக்கு சுனிதா வில்லியம்ஸின் பயணம் தோராயமாக 17 மணி நேரம் எடுக்கும் என கணிக்கப்படுகிறது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು