அதிமுகவை உடைக்க நினைத்தால் மூக்குதான் உடைபடும்.. செங்கோட்டையன் குறித்த கேள்வி! எடப்பாடி பழனிசாமி பதில்..!

AIADMK Internal Conflict: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் (Sengottaiyan) கருத்து மோதலும், மன கசப்பும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அதிமுக நிர்வாகி செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

சென்னை, மார்ச் 18: கடந்த 2025 பிப்ரவரி மாதம் 9ம் தேதி கோயம்புத்தூரில் விவசாக அமைப்புகள் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு (Edappadi K. Palaniswami) அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்கான அழைப்பிதழ் மற்றும் பேனர்களில் முன்னாள் மறைந்த முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா (J. Jayalalithaa) ஆகியோரில் புகைப்படம் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தார். அப்போது முதல் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் (Sengottaiyan) கருத்து மோதலும், மன கசப்பும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அதிமுக நிர்வாகி செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

என்ன சொன்னார் எடப்பாடி பழனிசாமி..?

செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் சென்னை தலைமை செயலகத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். ஏன் எங்களை பிரிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். எப்போது அதிமுக பிரியும் என்றே நினைக்கிறார்கள். நான் என்றைக்கும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பதவியேற்றேனோ, அன்று முதல் அதிமுகவில் பிரிவினை உண்டாக்க நினைக்கிறார்கள். அதை உடைத்து தூக்கி எறியப்பட்டு வருகிறது. அனைந்திந்திய அண்ணா திராவிட கழகத்தை யாராலும் உடைக்க முடியாது, முடக்க முடியாது. அதிமுகவை உடைக்க நினைப்பவர்களின் மூக்குதான் உடைபடும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுக கட்சித் தலைமையுடன் எந்த விரிசலும் இல்லை என்று செங்கோட்டையன் மறுத்தாலும், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதேபோல், தமிழ்நாடு பட்ஜெட் நாளில் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதைத் தவிர்த்தார். எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்காமல் சட்டமன்ற சபாநாயகர் எம்.அப்பாவையும் செங்கோட்டையன் சந்தித்தார். கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி அப்பாவை சந்தித்ததாக செங்கோட்டையன் தெரிவித்தார். இருப்பினும், அவரது நடவடிக்கைகளை அதிமுக தலைமை ஏற்கவில்லை. முன்னாள் அமைச்சர் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் எஸ்.வைகைச்செல்வன் தெரிவித்தார். அப்போது பேசிய அவர் “எங்கள் பொதுச் செயலாளருடன் தனது கருத்து வேறுபாடுகளை பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, செங்கோட்டையன் தனது குறைகளை பொதுவில் தெரிவிப்பது அநாகரீகமானது” என்று அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை:

அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளான தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சட்டமன்றத்தில் நேற்று (18.03.2025) மற்றொரு மூத்த நிர்வாகியான செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் இதுகுறித்து கூறும்போது, அதிமுக மட்டுமல்ல, எந்த கட்சி தலைவர்களுக்குள் இதேபோன்ற கடுத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம்தான். பேச்சுவார்த்தை பிறகு செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானம் அடைந்தார். இனி, இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு என்பதே இல்லை. இனி அதிமுகவின் இலக்கு 2026ல் ஆட்சியை அமைப்பதில்தான் உள்ளது என்று தெரிவித்தனர்.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು