Annamalai: நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல்.. விஜய்யை கடுமையாக சாடிய அண்ணாமலை!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவையும் விஜயையும் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் மற்றூம் திமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து நாடகமாடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் பி டீம் தமிழக வெற்றிக் கழகம் என தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச் 17: திராவிட முன்னேற்ற கழகத்தின் (DMK) பி டீம் விஜய் (Thalapathy Vijay) என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். கடந்த வாரம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத மோசடி பற்றிய ஆதாரங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இப்படியான நிலையில் தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (மார்ச் 17, 2025) போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அக்கட்சியின் தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் சென்று கொண்டிருந்த நிலையில் பாதி வழியிலேயே அவர்களை நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரையும் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

விமர்சித்த தமிழக வெற்றிக் கழகம்

இப்படியான நிலையில் தமிழக வெற்றிக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பொதுச்செயலாளர் ஆனந்த், “டாஸ்மாக் விவகாரத்தில் திமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் நாடகமாடுவதாக சரமாரியாக விமர்சித்து இருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் நாடகமாடுவதை விட்டுவிட்டு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக கட்சி கழகம் வலியுறுத்தியுள்ளது. டாஸ்மாக் முறைகேடுகள் விவகாரத்தில் மத்திய அரசு கீழ் இருக்கும் அமலாக்கத்துறை துரிதமாக செயல்பட்டு மேல் நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். அது போன்று எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை.

தமிழக பாஜக இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தையாக உள்ளது. மற்ற மாநிலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்ற போது என்ன நடந்தது? ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய தமிழக வெற்றிக் கழகம் மத்திய மற்றும் மாநிலத்தை ஆளும் அரசுகள் தங்களை வெளியில் எதிரிகள் போல் காட்டிக் கொண்டு புரவாசல் வழியாக மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தெரிகின்றது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அண்ணாமலை கடும் கண்டனம்

இந்த நிலையில் திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாஜகவினர் விடுவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் செய்யும் விஜய்க்கு மக்கள் பிரச்சினைகள் பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை சினிமாவில் குடித்து புகை பிடித்து விட்டு டாஸ்மாக் பற்றி பேச விஜய்க்கு என்ன உரிமை உள்ளது எனவும் விமர்சித்தார்.

மேலும் எனக்கும் பேச தெரியும் அதனால் தமிழக வெற்றி கழகம் எல்லை மீறக் கூடாது. நாடகம் போடுவது பாஜகவா? விஜயா? எனக் கேட்ட அண்ணாமலை தமிழக வெற்றிக்கழகமும் சேர்ந்து தான் நாடகம் ஆடுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தான் பி பீம் விஜய். இன்றைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கையை பார்த்த பிறகு தெரிவிக்கிறேன். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என ஆரம்பித்த சீக்ரெட் ப்ராஜெக்ட் தான் தமிழக வெற்றி கழகம் என தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் சினிமா ஷூட்டிங் போல அரசியல் பண்ண நினைக்கிறார்கள். அவர்களின் முதலில் களத்திற்கு வர சொல்லுங்கள். சினிமா ஷூட்டிங்கில் உட்கார்ந்து கொண்டு நடிகைகளின் இடுப்பை கிள்ளி கொண்டு விஜய் அரசியல் செய்கிறார். தமிழக வெற்றிக் கழகம் தனது எல்லையை மீறி பேசக்கூடாது. நான் என்ன விஜய் மாதிரி நடிகைகளின் இடுப்பை கிள்ளி கொண்டு அங்கிருந்து அறிக்கை கொடுத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறேனா? கேள்வி கேட்ட அண்ணாமலை நான் களத்தில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು