Tamilnadu Govt Warning: தமிழ்நாடு அரசு, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ விடுப்பை தவிர, சாதாரண விடுப்பு அல்லது பிற விடுப்புகள் எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மார்ச் 19: பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் 2025 மார்ச் 19 இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
முன்னதாக, 2025 பிப்ரவரி 25ஆம் தேதி மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அத்துடன், 2025 மார்ச் 13ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமும் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித் துறையினரின் கோரிக்கைகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில், ஊராட்சி செயலாளர், ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதும் அடங்கும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் இந்த போராட்ட நடவடிக்கைகள், அவர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாக காணப்படுகிறது.
தமிழக அரசு எச்சரிக்கை
பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மருத்துவ விடுப்பை தவிர, சாதாரண விடுப்பு அல்லது பிற விடுப்புகள் எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சில வேலைநிறுத்த அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், அரசு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.