Chennai’s Pink Auto Scheme: சென்னையில் பெண்களுக்கு தொழில் வாய்ப்பு..! ஆட்டோ ஓட்ட ஆசையா..? விண்ணப்பிக்க கடைசி நாள் இதுதான்!

 ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பெண்களின் சுய தொழிலில் சிறந்து விளங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பிங்க் ஆட்டோக்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழங்கப்படும் ஒவ்வொரு பிங்க் ஆட்டோகளிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

சென்னை, மார்ச் 20: தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் மகளிருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் புதிய முயற்சியாக, சென்னையில் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் மூலம் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதிபடுத்தும் வகையில் “பிங்க் (இளஞ்சிவப்பு) ஆட்டோக்கள்” வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பெண்களின் சுய தொழிலில் சிறந்து விளங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பிங்க் ஆட்டோக்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழங்கப்படும் ஒவ்வொரு பிங்க் ஆட்டோகளிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஏதேனும் அவசர காலநிலை அல்லது பிரச்சனை என்றால் காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிங்க் ஆட்டோ பெற்ற பெண்கள் கட்டணங்கள் ஏதுமின்றி (commission) “ஊர் கேப்ஸ்” ஆப் மூலம் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் திட்டத்தில் பயன்பெறுவது எப்படி..?

சென்னையில் 250 பிங்க் நிற CNG ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக தகுதிபெற்ற பெண்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினமான கடந்த 2025 மார்ச் 8ம் தேதி பிங்க் ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக CNG ஆட்டோக்கள் வழங்கப்படவுள்ளதால் தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருகின்ற 2025 ஏப்ரல் 6ம் தேதி வரை விண்ணப்பங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

யார் யார் தகுதி உடையவர்கள்..?

  1. இந்த திட்டத்தில் பயன்பெற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
  2. ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  3. பிங்க் ஆட்டோ பெறும் பெண்கள் 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  4. அதேபோல், ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
  5. மேலும், பிங்க் ஆட்டோ பெற முக்கிய தகுதி என்னவென்றால் சென்னையில் குடியிருக்க வேண்டும்.

அதன்படி, சென்னை மாநகரில் ஆட்டோ ஓட்ட விருப்பம் கொண்ட பெண்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை 8வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை 600 001ல் செயல்படும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 06.04.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು