சல்மான் கானுடன் படப்பிடிப்பு நடத்த மிகவும் கடினமாக இருந்தது – இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

சிக்கந்தரில் சல்மான் கானுடன் பணிபுரிந்த தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்த பிறகு படப்பிடிப்பில் ஏற்பட்ட  சவால்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். இடையூறுகள் இருந்தபோதிலும் குழு அதை ஏற்றுக்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

சல்மான் கானின் (Salman Khan) வரவிருக்கும் படமான சிக்கந்தர் (Sikandar) படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) லாரன்ஸ் பிஷ்னோயின் தொடர்ச்சியான கொலை மிரட்டல்களால் ஆபத்தில் இருந்தபோது ​​நடிகர் சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மேலும், சல்மான் கானை இந்த வேடத்திற்கு ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதையும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். பிரபல செய்தி நிறுவனத்திற்கு சல்மான் கானுடன் பணிபுரிவது பற்றி விரிவாகப் பேசிய ஏ.ஆர். முருகதாஸ், அவரை முற்றிலும் வித்தியாசமானவர் என்று கூறியுள்ளார். சிக்கந்தரின் அளவு மிகப்பெரியது – நாங்கள் பெரும்பாலும் 10,000 முதல் 20,000 பேர் வரை படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளைக் கொண்டிருந்தோம். இவ்வளவு பெரிய கூட்டத்தை நிர்வகிப்பது அதிக பாதுகாப்பு மற்றும் தீவிர ஒருங்கிணைப்பு தேவைப்பட்டது. எங்கள் அட்டவணையும் கடினமாக இருந்தது. மேலும் சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் அச்சுறுத்தலால் அது மேலும் பரபரப்பாக மாறியது.

மிரட்டல்கள் படப்பிடிப்பு அட்டவணையை எவ்வாறு பாதித்தன என்பதைக் குறிப்பிட்டு பேசிய அவர் அதன் பிறகு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் படப்பிடிப்புத் தளங்களில் உள்ள அனைத்து கூடுதல் கலைஞர்களையும் சோதனை செய்வது தினமும் 2 – 3 மணிநேரம் ஆகும். அங்கு பதிவுகள் மற்றும் சோதனைகள் எங்கள் நாளின் பெரும்பகுதியை எடுத்தன.

நாங்கள் பெரும்பாலும் படப்பிடிப்பை தாமதமாகத் தொடங்கி அதிகாலையில் தாமதமாக முடித்தோம். எங்கள் அன்றாட வாழ்க்கையின் சைக்கிள் முற்றிலும் மாறுபட்டது. ஆனால் நாங்கள் அதை பழகிக் கொண்டதும் அது ஒரு வழக்கமாக மாறியது. மேலும் படப்பிடிப்புத் தளம் மிகவும் பாசிட்டிவான வைபைப் பெற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சல்மான் கானுடனான தனது கூட்டணியில் நம்பிக்கையை வெளிப்படுத்தும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கதைக்கு ஒரு பெரிய ரசிகர்களுக்குப் பிடித்த சூப்பர் ஸ்டார் தேவைப்பட்டார். மேலும் சல்மான் சார் இந்த பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறார். அவரது ஆளுமை இந்த கதாபாத்திரத்திற்கும் கதைக்கும் வலு சேர்க்கிறது.

படத்தைப் பார்த்தவுடன் அவர் ஏன் சிறந்த தேர்வாக இருந்தார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று  ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார். இயக்குநரின் இந்தப் பேட்டி சிக்கந்தர் வெளியீட்டிற்கு முன்பும் அதன் அதிகாரப்பூர்வ வெற்றியை உறுதி செய்வதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவுத்து வருகின்ற்னார் என்பது குறிப்பிடதக்கது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು